2025 மார்ச் 15, சனிக்கிழமை

’நெருக்கடியில் விஜயதாச ராஜபக்ஷ என்னுடன் இணைந்தார்’

Freelancer   / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

விஜயதாச ராஜபக்ஷவிடம் பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி பெற்ற கனிஷ்ட சட்டத்தரணிகளால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை அரசியலிலும் சட்டத்துறையிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் விஜயதாச ராஜபக்ஷ, இலக்கியவாதி, எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞராக ஆற்றிய பணிகளுக்காக இதன்போது ஜனாதிபதியினால் பாராட்டப்பட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .