Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மே 15 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு காத்தான்குடியை நோக்கி செவ்வாய்கிழமை (13) இரவு பிரயாணித்த லொறியில் இருந்த பொருட்கள் புதன்கிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில் நாவலடி பகுதியில் வைத்து திடீரென தீபற்றிக் கொண்டுள்ளது .
அதனையடுத்து ,லொறியை நிறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர் .
இதில் எடுத்துச் சென்ற பொருடகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago