2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் மரணம்

Janu   / 2024 செப்டெம்பர் 01 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட    மர ஆலை  ஒன்றில்  கனரக ​ெவாகனத்தில் இருந்து மரக்குற்றியை ஏற்றி  இறக்கும் பணியில் ஈடுபட்ட நபர் மீது   மரக்குற்றி  சரிந்து  விழுந்ததில் வியாழக்கிழமை (29) இரவு  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ரசி குமார என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார் .

அவரின் சடலம்  சம்மாந்துறை  ஆதார  வைத்தியசாலைக்கு  எடுத்து  செல்லப்பட்டு   மரண  விசாரணை  மற்றும்  உடற்கூற்று   பரிசோதனையின்  பின்னர்  தலையில்  ஏற்பட்ட  பாரமான  விசையுடனான தாக்குதலால் ஏற்பட்ட பெருங்காயமமே  மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது .

மேலும் , உறவினர்களிடம்  சடலம்  கையளிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளை   சம்மாந்துறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X