2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முத்தமிழ் விழாவும் தேகனம் சிறப்பு மலர் வெளியீடும்

Gavitha   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

முத்தமிழ் விழாவும் தேகனம் சிறப்பு மலர் வெளியீடு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
 
மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு புனித சிசிலியாபெண்கள் பாடசாலை மற்றும் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
 
மேலும், இந்நிகழ்வில் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். 
 
சிறப்பு அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் மற்றும் கௌரவ அதிதியாக உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .