2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வில்லிசை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


உலகப் புகழ் பெற்ற தென்னிந்தியக் கலைஞர்களான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசாய்ராம் ராமானுஜம் வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நேற்று  சனிக்கிழமை மாலை மட்டக்களப்பிலுள்ள சாயி அனுக்கிரக நிலையத்தில் நடைபெற்றது.

'சாயி பகவானின் அவதார மகிமை' என்ற தலைப்பில் வில்லிசையை இக்குழுவினர் வழங்கினர்.

மட்டக்களப்பு ஸ்ரீசத்ய சாயி சேவா நிலையம், கிழக்குப்பிராந்திய சாயி சேவா நிலையங்களின் இணைப்புக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த வில்லிசை நடைபெற்றது.

இதன் போது சாயி சேவா நிலையங்களின் பிரதிநிதிகள், சாயி பக்தர்கள் பெருந்தொகையினரும் கலந்து கொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .