2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுகமான ராகங்கள் இசை நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 16 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டத்தில் நலிவுற்ற இசைக் கலைஞர்களை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கை வானொலி, தொலைக்காட்சி புகழ் கலைஞர்களுடன் கல்முனை எஸ்.சிவாவின் சுப்பர் டியூனஸ் இசைக்குழுவினரின் சுகமான ராகங்கள் இசை நிகழ்வு நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராஷக்ஹிப் கலந்து கொண்டார்.ஏனைய அதிதிகளாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் வீ.லவனாதன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.ராசய்யா, அட்டாளைசேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா, உதவி பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • BOOS Tuesday, 17 January 2012 10:47 PM

    ஒரு நல்ல குத்து பட்டுப் போடுப்பா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .