2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

Janu   / 2024 ஜூலை 29 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை, புவக்பிட்டிய - தும்மோதர வீதி, இலுக்பிட்டிய பிரதேசத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது .

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த,  பொலிஸ் விசேட பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 மிரிஸ்குடு வளைவு பகுதியில் உள்ள பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்துடன் லொறியும் மோட்டார் சைக்கிளும் பாலத்தின் கீழ் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X