2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நிர்வாண சடலம் மீட்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலையில் சிறு காயத்துடன் நிர்வாணமாக கிடந்த நிலையில் ஆண்ணொருவரின் சடலம்இ செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளது.

மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இருந்த இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 வென்னப்புவ - மேற்கு தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தச்சு தொழிலாளியான குறித்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் இருந்த இடத்திற்கு அருகில் தேவாலய மைதானத்தில்   மோட்டார் சைக்கிள்இ தலைக்கவசம் மற்றும் சில ஆடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .