2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நத்தார் கொண்டாட வந்த வெளிநாட்டவர் பலி

Mayu   / 2023 டிசெம்பர் 27 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக கஸகஸ்தானில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணியொருவர்  பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் டிட்டோ வட்லோவ் என்ற 51 வயதான கசாக் என்பவர் என பொலிஸார் தெரித்துள்ளனர். மேலும் நத்தார் பண்டிகையை கொண்டாட வந்த  இவர், பெந்தோட்டையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளதோடு நேற்றைய தினம் (26) அவர் தனது மனைவியுடன் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .