2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை, விபத்தில் பலி

Janu   / 2024 ஜூலை 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - காலி பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்கொன , அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த , ஒரு குழந்தையின் தந்தையான 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது குழந்தையைப் பார்க்க மோட்டார் சைக்கிளிள் சென்றுக்கொன்டிருந்த போது பேருந்தொன்றை  கடந்து செல்ல முற்பட்ட நிலையில் , ​​எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் , இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X