2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கடல் வெள்ளரி கைப்பற்று

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டி கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, திங்கட்கிழமை (10) திகதி சட்டவிரோதமான முறையில் 274 கிலோகிராம் உலர் கடல் வெள்ளரிகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 02 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் கடற்படைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 37 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் மன்னார் மற்றும் கல்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .