2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உள்ளாடைக்குள் தங்க ஜெல்: கல்முனை நபர் கைது

Janu   / 2024 மே 09 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் உடன்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் சுங்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (09)  கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைது செய்யப்பட்ட நபர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  25 வயதுடையவர் எனவும், அவர்  பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது .

குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரது உள்ளாடைக்குள்  மற்றும் காலணிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில்  1 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் அடங்கிய 03 பார்சல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .