2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

10 ஆண்டுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்

Editorial   / 2024 ஜூன் 14 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியில் வியாழக்கிழமை (13) தொடங்கியது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.


இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உக்ரேனுக்கு பல்வேறு வகையில் இராணுவ உதவி மற்றும் ராணுவ பயிற்சியை அமெரிக்கா வழங்கும்.

ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரேனுக்கு இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அத்துடன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் தனது நாட்டிற்கு இது ஒரு பாலமாக செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா  எந்தவிதமான ஆயுத தாக்குதலை நடத்தினாலும், அமெரிக்காவும், உக்ரேனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவேண்டும் என புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனின் இராணுவத்தை சிறப்பாக கட்டமைக்கவும், பயிற்சியில் ஒத்துழைக்கவும் உக்ரேனின் உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை உருவாக்கவும் இந்த ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .