2025 மார்ச் 15, சனிக்கிழமை

பயங்கரவாதிகள் தாக்குதல்:32 தொழிலாளர்கள் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தங்க சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர்.

 மாலியில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் கோவா நகரில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (9) தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அவர்களுக்கு பாதுகாப்பாக இராணுவ வீரர்களும் சென்றனர்.

அப்போது, அந்த வாகனங்களை குறித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தங்க சுரங்க தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து இராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். 

இதில் பயங்கரவாதிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .