2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2021-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜியாவோகின் யான் (வயது 30) என்ற சீன இளம்பெண்ணை பொலிஸ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்பேரில் டான்பரி நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஜியாவோகின் திடீரென சிறையில் இருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து பொலிஸார் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சுமார் 7 மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த இளம்பெண்ணை பொலிஸார் மீண்டும் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X