2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்தானது

Freelancer   / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கடந்த 2017ஆம் ஆண்டு அந்த நாட்டின் ஜனாதிபதி பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார்.

1960களில் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்டவரான எம்மர்சன் மனங்காக்வா, மரண தண்டனை முற்றிலுமான ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். 

மேலும், பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வந்தார்.

இந்த நிலையில், நாட்டில் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, மரண தண்டனை இரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்தார். 

இதன் மூலம் சிம்பாப்வேயில் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயில், தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். 

இந்நிலையில், புதிய சட்டத்தை அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X