2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை

Freelancer   / 2024 ஜூன் 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 2 கலவர வழக்குகளில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், அரசு இரகசியங்களை கசியவிட்டது, கலவரம் உள்பட 200 வழக்குகளை அந்த நாட்டு அரசு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஊழல் வழக்கில் அவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் நடந்த கலவரம் சம்மந்தமான 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வந்தன.

இந்த வழக்கில் இருந்து இம்ரான்கான், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, மாஜி தொலை தொடர்பு அமைச்சர் முரத் சயீத் ஆகியோரை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .