2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன

Editorial   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித திருத்தந்தை பிரான்சிஸை கௌரவிக்கும் வகையில், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் திங்கட்கிழமை (21) இரவு அணைக்கப்படும் என்று பிரெஞ்சு மேயர் ஆன் ஹிடால்கோ அறிவித்தார்.

பாரிஸில் உள்ள ஒரு இடத்திற்கு போப் பிரான்சிஸின் பெயரைச் சூட்ட நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். புனித திருத்தந்தை பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 88 வயதான திருத்தந்தை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பார் என்றும் ஸ்பானிஷ் நீதி அமைச்சர் பெலிக்ஸ் போலானோஸ் அறிவித்தார்.

ஒரு நல்ல மனிதர் மற்றும் ஒரு சிறந்த போப்பின் மறைவுக்கு ஸ்பெயின் இரங்கல் தெரிவிப்பதாகவும், புனித திருத்தந்தை பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி, போப் பிரான்சிஸ் உயிருடன் இருந்தபோது அவரை எதிர்த்த தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .