2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் கடும் மழை: 200 பேர் பலி

Freelancer   / 2024 மே 12 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணம் கடுமையான வௌ்ள பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளது.

அங்கு 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன.

பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .