2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க தூதரகங்களை மூட முடிவு

Janu   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுக் குறைப்புகளைக் கருத்தில் கொண்டு, 30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் கொன்ஸ்லேட் பிரிவுகளை மூடுவதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கவனத்தை செலுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் கொன்ஸ்லேட் பிரிவுகள் அடங்கும். சோமாலியா, ஈராக், மால்டா, லக்சம்பர்க், காங்கோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரான்சில் ஐந்து அமெரிக்க தூதரகங்கள் உள்ளன, அவற்றை மூடுவதற்கான திட்டங்கள் உள்ளன.

கூடுதலாக, ஜெர்மனி மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்களை மூடுவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X