2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

அகதி படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி; பலர் மாயம்

Freelancer   / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில், அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் நீரில் மூழ்கி  உயிரிழந்தனர்.

கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில்,   வெள்ளிக்கிழமை (13)  இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகே, இவ்வாறு கவிழ்ந்துஉள்ளது.

இதில் பயணித்த பலர் காணாமல் போயுள்ளதாகவும், கிரீஸ் கடலோர காவல்படை, சனிக்கிழமை (14) தெரிவித்துள்ளது.

சரக்கு கப்பல்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்டவர்களில் 29 பெண்கள் அடங்குவர். அகதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X