2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த  நோயாளிகள் யாருக்கும், காலவரையின்றி சிகிச்சை அளிக்கப்படாது என, கொல்கத்தா வைத்தியசாலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பங்காளதேசத்தில், இந்துக்களுக்கு எதிரானவன்முறைகள் கட்டவிழ்த்து வரப்படுகின்றன.

 இதனை தொடர்ந்து, மத்திய வெளிவிவகார அமைச்சு, இந்துக்களை பாதுகாக்கும்படி பங்காளதேச அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த சூழலில், இந்தியாவின் மூவர்ண கொடியும் அவமதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதனால், பங்காளதேச நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது என வடக்கு கொல்கத்தா வைத்தியசாலை முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி ஜே.என். ரே வைத்தியசாலையை சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த் கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக புண்படும் வகையில் நடந்து கொண்டதற்காக, பங்காளதேச நோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்க போவதில்லை. சனிக்கிழமை (30) முதல் காலவரையின்றி சிகிச்சையளிக்கப்படாது” என   கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X