2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: பொதுநல வழக்கு தாக்கல்

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமுல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த பொதுநல மனுவில், "யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த அடிப்படை தகவல்களை வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் பிரயாக்ராஜில் உள்ள வசதி மையங்களுக்கு உத்தரவிட வேண்டும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல், எளிதாக உதவி பெறக்கூடிய வகையில், அறிவிப்புகள், திசையைக் காட்டும் பலகைகள், சாலைகள் போன்றவற்றை பிற மொழிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

“உத்தரபிரதேச அரசின் ஒருங்கிணைப்புடன் கூடிய அனைத்து மாநில அரசுகளும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொண்ட அதன் சிறிய மருத்துவக் குழுவை நியமிக்க வேண்டும், இதனால் மருத்துவ அவசரநிலை ஏற்படும் போது மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடாது.

“ஜனவரி 29, 2025 அன்று நடந்த மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சம்பவம் குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X