2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காருக்குள் விளையாடிய சிறுவர்கள் பலி

Freelancer   / 2024 நவம்பர் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குஜராத் மாநிலம் - அம்ரேலி மாவட்டம், ரந்தியா கிராமத்தில், சனிக்கிழமை (2), கார் ஒன்றுக்குள் விளையாடிகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

வீட்டுக்கு அருகே குறித்த 4 சிறுவர்கள் உட்பட 7 சிறுவர்கள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள்,  4 குறித்த சிறுவர்களும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், சிறுவர்களால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.

இதனால் சிறுவர்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த 4 சிறுவர்களும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .