2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதை தடுக்கவும்

Editorial   / 2023 நவம்பர் 29 , பி.ப. 12:16 - 0     - 80

உள்ளூர் சந்தைகளில், தரமற்ற, கலப்படமான பொருட்களை விற்பனைச் செய்து கூடிய இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் முயற்சியிலேயே வர்த்தகர்கள் பலரும் மும்முரமாக ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில்,  தரமற்ற தக்காளி சோஸ் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள்  இருவர் உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு மாளிகாகந்த நீதிமன்றத்தில் 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும். 

இந்த தரக்குறைவான சோஸ் தயாரிக்க செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வணிக நாமத்தில்  விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. தமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வாழைத்தோட்ட, புதுக்கடை மற்றும்  மற்றும் கொச்சிக்கடை பொதுச் சுகாதார பரிசோதகரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த மாதிரிகள் தொடர்பான சுவையாளரின் அறிக்கைகள் கொழும்பு மாநகர சுவையியலாளர் ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பொருட்களைச் சரியான தரம் இன்றியும், தரம் தாழ்ந்தும் விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றியதற்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற முதல் நிறுவனம் இந்த நிறுவனம் அல்ல என்பதும், இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படும் கடைசி நிறுவனமும் அல்ல. 

உயிருக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கடத்தல் குறித்த முறைப்பாட்டைக் குப்பையில் போடாமல், உரிய முறையில் சோதனை நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் தொடர்பான தற்போதைய சட்டத்தை விட மிகக் கடுமையாகச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பல நாடுகளில் இந்தச் சட்டங்கள் கடுமையாகச் செயல்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலும், தவறு நிரூபிக்கப்பட்டால், தவறின் தன்மையைப் பொறுத்து, அவர்களின் தொழில்கள் கூட தடைசெய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் நிலைமை வேறு. இனிப்புகள் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனத்தில் காலாவதியான பொருட்கள் சில காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. 

ஊடகங்கள் மூலமாகவும் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்தது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன, ஆனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீண்ட கால நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சில நாட்களில், அதன் தயாரிப்புகள் மீண்டும் விற்பனை செய்யத் தொடங்கின. 
இந்த சம்பவத்தை ஒடுக்க அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் சிலர் கூறினர்.

பல வர்த்தகர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் தமது தொழில்களை நடத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதிக உற்பத்திச் செலவு, குறைந்த விற்பனை, செலுத்த வேண்டிய அதிக வரி எனப் பல்வேறு காரணங்களால் அவர்கள் இந்தச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் சந்தையில் தரக்குறைவான பொருட்களை விற்க இது ஒரு காரணம் அல்ல.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X