Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் தனது 14 வயது மகளை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்கானப்பட்ட தந்தைக்கு, 18 வருட கடூழிய சிறைத் தண்டணையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க உத்தரவிட்டார்.
அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 06 மாதங்களுக்கு சாதாரண சிறைத்தண்டனையும் நட்டஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் 01 வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதித்தும் உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 03 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சீனி முகம்மது றுபைதீன் (வயது 46) என்பவருக்கே இவ்வாறு, கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது
2010.02.26ஆம் திகதியன்று, தனது மகளை வன்புணர்தமை தொடர்பாக தந்தை மீது அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக சட்ட மா அதிபரால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 364 (03) க்கு அமைவாக குற்றப்பகிர்வு பத்திரம், குறித்த குற்றவாளிக்கு எதிராக 2017.02.21ஆம் திகதி கல்முனை மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக இடம்பெற்று இவ்வழக்கு விசாரணை, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (05) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி மேற்படி உத்தரவிட்டார்.
வழக்காளி சார்பில், அரச சட்டத்தரணி மலீக் அஸீஸ் மன்றில் ஆஜராகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
2 hours ago