2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வைத்தியசாலையை ஆரம்பிக்குமாறு மகஜர்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகரிலுள்ள மீள்குடியேற்றக் கிராமத்தில் வைத்தியசாலையொன்றை ஆரம்பிக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகல்லாகமவுக்கு இன்று (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒலுவிலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், அஷ்ரப் நகரை அண்டிய ஹிறா நகர், ஆலிம்சேனை போன்ற பிரதேசங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு வாழும் மக்கள் திடீரென நோய்வாய்பட்டால், சுமார் 05 கிலோமீற்றருக்கும் அப்பாலுள்ள ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரென, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகள் இன்மையால், இரவு நேரங்களில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், உயிராபத்துகளும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாள்களாவது நடமாடும் வைத்திய சேவையை ஆரம்பிக்குமாறு, அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .