Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனவென, அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலிக விக்ரமரத்தன தெரிவித்தார்.
தேர்தல் அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், நாளை 11ஆம் திகதி முதல் எதிர்வரும் புதன்கிழமை 13ஆம் திகதி வரை, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேற்படி நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் அலுவலகத்துக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago