Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம், முறானவட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்று மண்ணுடன் மூன்று உழவு இயந்திரங்களும் இதன்போது, திருக்கோவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருக்கோவில், சாகாம் விசேட அதிரப்படையினரும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி மொஹமட் சதாத், பொலிஸ் கான்ஸ்டபில் என்.டி.தாஹீர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவலைப்பின் போதே, மேற்படி சந்தேநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் சாகாம் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு இடம்பெற்று வருவதாக, திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
29 Apr 2025