2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கருத்தரங்கு

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக, தொழில்சார் கற்கைகள் மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பு நிலையத்தினால் நடத்தப்படுகின்ற 2014ஃ2015ஆம் கல்வியாண்டுக்கான கலைமாணி மற்றும் வியாபார நிர்வாகமாணி மாணவர்களுக்கான முதலாம் வருட இரண்டாம் பருவக் கருத்தரங்கு, நாளை 18ஆம் திகதி சனிக்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில் சார் கற்கை நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறூக்  தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய குறிக்கப்பட்ட நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான கடிதம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடிதம் கிடைக்காத மாணவர்கள் 067-2052801 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு, உதவிப் பதிவாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .