Editorial / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்துக்கு முன்னால், பொத்துவில் வீதியில் அமைந்துள்ள, நான்கு தங்க நகைக் கடைகள் மற்றும் விளையாட்டு உபகரணம், அன்பளிப்புப் பொருட்கள் விற்பனை நிலையம் என்பன உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், நேற்று (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கடைகளின் பின் கதவுகள் உடைக்கப்பட்டும், கடைகளின் கூரை வழியாகவும் திருடர்கள் உள்நுழைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்டுள்ள தங்க நகைகள் மற்றும் பொருட்களின் பெறுமதி இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
49 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
3 hours ago