யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் இன்று தெரிவித்தார்.தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரதி விழா நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 11ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை பாரதி விழா இரு அரங்குகளாக நடைபெறவுள்ளது.
அன்றையதினம் 'பாரதியின் புலமைத்துவம்' என்ற தலைப்பில் நூல் ஒன்றும் 'மகாகவி பாரதி' என்ற தலைப்பில் இறுவெட்டு ஒன்றும் வெளியிடப்படவுள்ளன. தமிழ் சங்கத்தில் அங்கத்தவர்களாகவுள்ள மாணவர்களுக்கு இடையில் பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளதாகவும் பேராசிரியர் சண்முகதாஸ் குறிப்பிட்டார்.
.gif)