ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்த 2 சகோதரிகளும் அவர்களின் இலங்கை பணிப்பெண் ஒருவரும் அந்த நாட்டில் மல்ச்ஹா வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்னா மிஷ்பா (வயது 27), இபான் மிஷ்பா (வயது 21) ஆகியோரே விபத்தில் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் கார் இன்னொரு காருடன் மோதி விபத்திற்கு உள்ளானதன் காரணமாகவே இவர்கள் பலியாகியுள்ளனர்.
அளவுக்கு மீறிய வேகமும் போதிய கவனம் இன்மையுமே இந்த விபத்திற்கான காரணம் எனவும் பொலிஸார் கூறினர்.
.gif)
