அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது ஒரு கேலிக்கூத்து என ஐ.தேக. நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.'18 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது ஒரு கேலிக்கூத்து. அனைத்து பொலிஸ், நீதித்துறை, தேர்தல் ஆணையாளர் அதிகாரங்களும் ஒரு தனி நபரிடம் வழங்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் ஜனநாயகமற்றதாகும்' என அவர் கூறினார்.
தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் 17 ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் மீள அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். 17 ஆவது திருச்சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது தற்போதைய ஜனாதிபதியும் சபாநாயகரும் அதற்கு பூரண ஆதரவு வழங்கினர். 17 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான அதிகார பரவலாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன 18 ஆவது திருச்சட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன' என அவர் கூறினார்.
'18 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பரந்தளவிலான அதிகாரங்களானவை சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தப்படுவi தடுக்கும் எனவும் கரு ஜயசூரிய கூறினார்.
பொலிஸ் துறையில் நேர்மையான, அர்ப்பணிப்புள்ள அதிகாரங்கள் பலர் இருந்த போதிலும் அரசியல் தலையீடுகள் காரணமாக அவர்கள் கடமைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அவர் கூறினார்.
.gif)
