சிகிரியாவில் நேற்று மாலை இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட சுற்றுலா பயணிகள் பலர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.இதன்போது உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏனையோர் சிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.
.gif)
