கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 220 கைதிகளுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், குறித்த சிறைச்சாலையைச் சேர்ந்த கைதியொருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையிலேயே கோட்டை நீதவான் பிரபர்ஷா ரணசிங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்த மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சிறைக்கைதி ஒருவரே எயிஸ்ட் நோய் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
.gif)
