Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

அனைவருக்கும் ஒளி கொடுக்க நான் தயார்: சரத் பொன்சேகா

பொன்சேகா எனும் விளக்கு இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி கொடுக்க தயாராகவே உள்ளது. இந்த ஒளியைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாக என்னோடு இணைய முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் எனது ஒளி அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது. தற்போதும் தேவைப்படும் பட்சத்தில் எனது கொள்கைகளை ஏற்று அவர்கள் என்னுடன் இணைந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் இருப்பவர்கள் சுதந்திரமாக எந்தவொரு கருத்தையும் முன்வைக்க முடியாது. பின்வரிசையில் அமர்ந்திருந்த நான் முன்வைக்கும் கருத்துக்களையேனும் அவர்களால் முன்வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா, மேலும் கூறினார்.
Views: 2514

By A Web Design

Comments   

 
-1 +1 # razeek 2012-05-25 22:49
மண்ணெண்ணை பைப்லைன் கனெக்சன் சவூதியில இருபந்து எடுத்திருக்கார் போல? இவரால ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது. பல் பிடுங்கப்பட பாம்பு. சும்மா காத்துதான் வரும்.
Reply
 
 
-0 +1 # Asra 2012-05-26 00:26
பொன்சேகா என்னும் ஒளியால் நாட்டில் உள்ள இருள் அகலும்.
Reply
 
 
-0 +0 # Mohammed Hiraz 2012-05-26 09:37
அப்ப இனி ராத்திரியில எந்த ஊட்டிலும் ரோட்டிலும் விளக்கு போட தேவை இராதுபோ.ல எங்கட ஒளி விளக்கு எல்லாருக்கும் ஒளி தற்றாராமே, ஏன் நாம சும்மா மின்சாரத்த செலவழிச்சி கட்டணம் செலுத்திகிட்டு? எங்கட ஒளிய கொண்டு எல்லா இடத்திலும் ஒளிர வைச்சா மின்சார கட்டணமாவது மிச்சமாகுமில்ல??
Reply
 
 
-0 +1 # nawshad 2012-05-26 12:55
நான் நினைக்கிறேன் இவரால் ஒரு மாற்றம் வரும் என்று.
Reply
 
 
-0 +0 # xlntgson 2012-05-26 17:32
OLIYAAL VAAZHUM VITTIL POOCCHIGALAAGA ILLAAVITTAAL SARI.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.