
(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)
தற்போது பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மாராவில, தூவவத்தை எனும் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இங்கு சுமார் 500 மீற்றர் தூரம் வரை நிலப்பரப்பு கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நேற்று ஏற்பட்ட இந்த கடலரிப்பு காரணமாக இரண்டு சிறிய கத்தோலிக்க தேவாலங்கள், 15 வீடுகள் உட்பட சுமார் இருபது தென்னை மரங்களும் சேதமடைந்துள்ளன.
மேலும் பல வீடுகளும், இரண்டு ஹோட்டல்களுடன் பல தென்னை மரங்களும் கடலரிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. நேற்றைய கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களைப் படங்களில் காணலாம்.



.gif)
