(மொஹொமட் ஆஸிக்)கண் பார்வையில் குறைபாடு உள்ள ஒருவர் சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை மோசடியான முறையில் பெற்றக்கொள்ள முயற்சித்தவரையும் அவரது உதவியாளரையும் பேராதெனிய பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
கண்னில் உபாதை உள்ளவருக்கு பதிலாக அவரது உதவியாளர் மருத்துவ பரிசோதனைக்கு முகங்கொடுத்த போது, மருத்துவ அதிகாரியால் சந்தேகப்பட்டு பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த நபர் பேராதெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
