
(சீ.எம். ரிஃபாத்)
அரசாங்கத்தின் தேசிய வெசாக் தின வைபவம், கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளவில் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் தலதா மாளிகையின் தியவதன நிலமே நீலங்க தேல பண்டார, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர்கள், பௌத்த பிக்குகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய வெசாக் பண்டிகையை நினைவுகூரும் வகையில் அஞ்சல் திணைக்களம் விசேட முத்திரை ஒன்றையும் இதன்போது வெளியிட்டது. (படப்பிடிப்பு: சுதத் சில்வா)
.jpg)
.jpg)
.jpg)
.gif)
