அக்குறணை நகருக்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்று நேற்று புதன்கிழமை இரவு திருட்டுப் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்குறணை நகரிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நேற்று புதன்கிழமை இரவு நிறுத்திவைக்கப்பட்ட இம்முச்சக்கரவண்டி இன்று வியாழக்கிழமை காலை பார்க்கும்போது காணாமல் போயுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் பொலஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
.gif)
