.jpg)
(எம்.பரீட்)
புதிய விவசாய தொழிநுட்பங்களை கிராம புறங்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய நடமாடும் சேவை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியா, காக்காமுனை கிராமத்தில் நடைபெற்றது
கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாட்ட விவசாய பிரதி பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதில் பீடைகள் கட்டுப்படுத்தும் வழி வகைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் விவசாயிகளின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது.
.jpg)
.gif)
