.jpg)
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை தனியார் பஸ்நிலையம் திறப்பு விழாவும் பஸ் நிலைய கடைத்தொகுதி கையளிப்பு நிகழ்வும் இன்று மாலை கல்முனை நகரில் இடம்பெற்றது.
18 கடை அறைகளைக் கொண்ட பஸ் நிலைய கடைத்தொகுதியும், சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் தரிப்பு நிலையமுமே இன்று திறந்து வைக்கப்பட்டன.
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராஹிபு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

.jpg)
.jpg)

.jpg)

.gif)

Comments
RSS feed for comments to this post