மருதனார்மடம், விவசாய பாடசாலைக்கு அருகாமையில் உள்ள கோழிப் பண்ணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகள் என்பவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு வேளையில் பண்ணைக்குள் புகுந்த திருடர்கள் பண்ணையாளர் உறங்கிக்கொண்டிருந்த போது சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் மூன்ற கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
