|
புதன்கிழமை, 19 ஜூன் 2013 |
ஜோதிடம்இன்றைய பலன்கள் (02.07.2012)
02-07-2012
இன்றைய பலன்கள் (02.07.2012)
இன்றைய பலன்கள் (27.04.2012)
27-04-2012
இன்றைய பலன்கள் (27.04.2012)
இன்றைய பலன்கள் (26.11.2011)
26-11-2011
இன்றைய பலன்கள் (26.11.2011) இன்றைய பலன்கள் (07.11.2011)
07-11-2011
இன்றைய பலன்கள் (07.11.2011) இன்றைய பலன்கள் (23.08.2011)
23-08-2011
இன்றைய பலன்கள் (23.08.2011) இன்றைய பலன் (07.08.2010)
07-08-2010
இன்றைய பலன் (07.08.2010)
இன்றைய பலன்கள் (06.08.2010)
06-08-2010
இன்றைய பலன்கள் (06.08.2010)
இன்றைய பலன்கள் (09-07-2010)
09-07-2010
மேஷம் - மனநிம்மதி
ரிஷபம் - திட்டம் மிதுனம் - பழுது கடகம் - அந்தஸ்து சிம்மம் - சிந்தனை கன்னி - பணவரவு துலாம் - தொந்தரவு விருச்சிகம் - காரியசித்தி தனுசு - உற்சாகம் மகரம் - ஆதாயம் கும்பம் - உறுதி மீனம் - சந்திப்பு இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி
08-07-2010
இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி
மேஷம் - மீட்டல் ரிஷபம் - சண்டை மிதுனம் - செலவு கடகம் - திறமை சிம்மம் - புத்துணர்ச்சி கன்னி - அலைச்சல் துலாம் - நாவடக்கம் விருச்சிகம் - அனுபவம் தனுசு - திட்டம் மகரம் - பொலிவு கும்பம் - பேச்சு மீனம் - வேலை 16-03-10 to 22-03-10
17-03-2010
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-10-2009 முதல் 28-5-2010 வரை கடகத்தில் நீசமாக இருக்கிறார். பொதுவாக ஒரு ராசியில் 45 நாட்கள் அல்லது 50 நாட்கள் இருக்கும் செவ்வாய் சுமார் எட்டு மாத காலம் நீச ராசியில் இருப்பது ஒரு வித்தியாசமான சஞ்சாரம். அதிலும் அவர் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியாகவோ அல்லது மகரத்தில் உச்சமாகவோ இருந்தார் என்றால் ஒரு சிறப்பு. ஆனால் அவர் கடகத்தில் நீச ராசியில் இவ்வளவு காலம் தங்கியிருப்பது எல்லாருக்கும் ஒரு கெடுதலான பலன். குறிப்பாக மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம், கடக ராசி, கடக லக்னம் ஆகியோருக்கு எல்லாம் இந்த எட்டு மாத காலமும் ஒவ்வொரு வகையிலும் பாதிப்புதான். இதற்கிடையே செவ்வாயின் வக்ரமும் குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக ஆகிவிட்டது. செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த சம்பந்தமான நோய், வைத்தியச் செலவுகளும்; சகோதர காரகன் என்பதால் சகோதர வகையில் பாதிப்புகளும் இழப்புகளும் ஏற்பட்டன. பலருக்கு உடல் ஆரோக்கியமும் கெட்டது. இன்னும் இரண்டு மாத காலம் செவ்வாயின் தாக்குதலைச் சந்தித்து தப்பிக்க முருகனை வழிபடுங்கள்.
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சமாக இருக்கிறார். அவர் உச்சமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு அஸ்தமனம். அவருக்கு சாரம் கொடுக்கும் புதன் (ரேவதி) நீசம். அதனால் 1, 6-க்குடைய பலனில் (சுக்கிரன் 1, 6-க்குடையவர்) 1-ஆம் இடத்துப் பலனைக் காட்டிலும் 6-ஆம் இடத்துப் பலனே முதன்மையாக நடக்கும். 1-ஆம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி. 6-ஆம் இடம் என்பது நோய், கடன், எதிரி, வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை இவற்றைக் குறிக்கும் இடம். ஒரு கிரகத்திற்கு பாபத் தன்மை வலுவாக இருந்தால் பாப ஆதிபத்தியமே முதலில் வேலை செய்யும். சுபத் தன்மை வலுவாக இருந்தால் சுப ஆதிபத்தியமே வேலை செய்யும். சுக்கிரன் உச்சமாக இருந்தாலும் வீடு கொடுத்தவர், சாரம் கொடுத்தவர் எல்லாம் பலமிழந்த நிலையில் இருப்பதால் சுக்கிரனின் 6-ஆம் இடத்துப் பலன்களையே நீங்கள் சந்திக்க நேரும். மேலும் சுக்கிரனுக்கு சனி பார்வை கிடைப்பதால்- சனியும் வக்ரம் என்பதால்- சனி 5-ல் இருக்கும் காரணத்தால் பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளைச் சந்திக்கலாம். அல்லது மனத்தளவிலே வெளியில் சொல்ல முடியாத வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கலாம்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீச ராசியில் இருக்கிறார். ராசிக்கு கேந்திரமாக இருப்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்ந்திருப்பதாலும் புதனுக்கு நீசபங்கம் கிடைக்கிறது. ஆனால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கவில்லை. ஒரு நீசபங்கம் பெற்ற கிரகம்- அந்த கிரகத்திற்கு 5, 9 என்ற திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் கிடைத்தால் நீசபங்க ராஜயோகமாகும். நீசகிரகம் பங்கம் அடைவது ஒரு பலன். நீசபங்கம் பெற்ற கிரகம் ராஜயோகத்தைத் தருவது இன்னொரு பலன். ஒரு வேட்பாளர் லட்சக்கணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்றுவிட்டால் நீசம். கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி தோற்ற வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நீசபங்கம். அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் நீசபங்க ராஜயோகம். ஜென்ம ராசியில் கேது நிற்பதாலும் சனி பார்ப்பதாலும் புதன் நீசபங்கம். பெற்றாலும் ராஜயோகப் பலனைச் செய்ய மாட்டார் என்பது கருத்து. ஆனால் 10-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் வேறு வகையில் உங்களுக்கு ஆறுதல் பரிசு போல நன்மைகள் நடக்கலாம். கெடுதல்கள் அணுகாது.
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் ஜென்ம ராசியில் நீசமாக இருக்கிறார். 2010- மே மாதம் வரை அவர் நீசமாகத்தான் இருப்பார். இதன் மத்தியில் சிறிது காலம் குரு மகரத்தில் நீசமாக இருந்து செவ்வாயைப் பார்த்தபோது எதிர்பாராத சில நன்மைகளையும் அனுபவித்து இருக்கலாம். ஆனால் 2009 டிசெம்பர் முதல்- குரு கும்பத்தில் வந்த நாள் முதல் குருவும் செவ்வாயும் 6, 8-ஆக இருந்த காரணத்தால் ஏழரைச்சனி விலகியும் கடக ராசிக்காரர்களுக்கு முழுமையான எதிர்பார்த்த நன்மைகளைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் ஆனது. அதிலும் செவ்வாய் வக்ரம், குரு அஸ்தமனம் என்ற நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக பல காரியங்கள் தள்ளிப்போனது. சிலருக்கு வருமானமே இல்லாத குறை; சிலருக்கு ஆயிரக்கணக்கில்- லட்சக்கணக்கில் பணம் புரண்டாளும் வேறு வகையில் எதிர்பார்த்தவை நடக்காமல் ஏமாற்றமான நிலை; சிலருக்கு தொழில் யோகம், தனவரவு இருந்தும் அரசாங்கத் தொல்லை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு. தற்போது குரு அஸ்தமனம் நீங்கியது. (22-3-2010 குரு உதயம்). ஓரளவு தடைகள் விலகும். செயல்களில் வேகம் இருக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். அவரோடு 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைகிறார்கள். இவர்களை சனி (6-க்குடையவர்) பார்ப்பது ஒரு கெடுதல். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு (மீன ராசிக்கு) 12-ல் மறைவது இன்னொரு கெடுதல். அதேசமயம் 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது கெடுதலிலும் நல்லது. என்றாலும் ஏழரைச்சனி வக்ரம் என்பதால் வசதி வாய்ப்பு, சௌகர்யங்களுக்குக் குறைவில்லை என்றாலும், நன்றாகப் படிக்கும் பள்ஸ் டூ மாணவன் பரீட்சையில் தெளிவாக எழுதாமல், மெரிட் மார்க் கிடைக்காமல் பார்டர் மார்க்கில் பாஸ் பண்ணிய மாதிரித்தான். மேற்படிப்பு இன்ஜினியரிங் காலேஜிற்கு மெரிட் சீட் கிடைக்காமல் பேமெண்ட் கோட்டாவில் லட்சக்கணக்கில் செலவழித்து சீட் வாங்கிய மாதிரிதான். சனியின் வக்ரம் உக்ர பலம் என்பதால் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரும். வாரக் கடைசியில் மார்ச் 22-ஆம் தேதி குரு அஸ்தமனம் நீங்கி உதயமான பிறகு, சிம்ம ராசியைப் பார்க்கும் குருவினால் எதிர்பாராத முன்னேற்றங்களையும் திருப்பங்களையும் சந்திக்கலாம். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகவும் அமையலாம்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் மீனத்தில் நீசமாக இருக்கிறார். நீசம் பெற்ற ஒரு கிரகத்திற்கு நீசம் என்பது ஒரு நிலை; நீசபங்கம் என்பது ஒரு நிலை; நீசபங்க ராஜயோகம் என்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையின் பலனையும் ஏற்கெனவே மிதுன ராசிப் பலனில் பார்த்திருக்கிறோம். ஜென்மத்தில் சனி நிற்பதும் மிதுனத்தில் கேது நிற்பதும் புதனுடைய 1-ஆம் பாவம், 10-ஆம் பாவத்திற்கு பலக்குறைவுதான். அதாவது புதன் கிரகத்தின் இரண்டு ஆதிபத்திய பாவத்திலும் பாவ கிரக சம்பந்தம் இருந்தால், அந்த பாவ ஆதிபத்தியம் பாப பலனாக மாறும். அதாவது அசுப பலன். கன்னி ராசிக்கு குரு 6-ல் இருந்து 10-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஓரளவு தொழில் இயக்கம் தடைபடாமல் செயல்பட்டாலும் போட்டி, பொறாமை, வேலையாட்கள் பிரச்சினை, கடன், வட்டி போன்ற 6-ஆம் இடத்து ஆதிக்கமும் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்காது. மேலும் ஜென்மச்சனி வக்ரம் என்பதால் (வக்ரத்தில் உக்ர பலம்) சனியின் வக்ரம் தெளியும் வரை ஏழரைச் சனியின்- ஜென்ம சனியின் பாதிப்பு உங்களைப் பாடாய்ப்படுத்தத்தான் செய்யும். வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்குவதால் ஒரு ஆறுதல் பலன் எதிர்பார்க்கலாம்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 10-ல் 2, 7-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் நீசமாக இருக்கிறார். சில நேரங்களில் கடுமையான நீசமாகவும், சில நேரங்களில் நீசபங்கமாகவும் செவ்வாய் செயல்பட்டார். மகரத்தில் குரு நின்று செவ்வாயைப் பார்த்த காலம், நீசனை நீசன் பார்த்ததால் நீசபங்கமாக இருந்தது. பிறகு குரு கும்பத்தில் மாறி செவ்வாயும் குருவும் 6, 8-ஆக இருக்கும் காலம் நீச வேகம் அதிகமாகி உங்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் நீசமடைகிறார். வாழ்க்கையிலும் தொழில் துறையிலும் நித்தியகண்டம், பூரண ஆயுசாக நாள் ஓடுகிறது. ராசிநாதன் சுக்கிரன் உச்ச ராசியில் இருந்தும் 6-ல் மறைவு என்பதால் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, யார் வீட்டுப் பணத்தையோ புரட்டி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். (பணம் அல்லது சரக்கு) ஏதோ ஒன்று உங்கள் ரொட்டேஷன்னுக்குப் பயன்படும். 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தெய்வ நம்பிக்கையாலும் பிரார்த்தனை வழிபாடுகளினாலும் உங்கள் வாழ்நாள் வீண் நாளாக மாறாமல் ஏதோ இயங்குகிறது. குரு 9-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனும் ராசியைப் பார்க்கும் பலனும் அதுதான்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2009 ஒக்டோபர் முதல் ஆறு மாத காலம் நீச ராசியில் இருக்கிறார். கடகத்தில் இன்னும் இரண்டு மாதம் இருப்பார். செவ்வாய் நீச ராசிக்கு வந்த நாள் முதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளும் கௌரவப் போராட்டங்களும் குடும்பத்தில் குழப்பங்களும் மனைவி, மக்கள் வகையில் சஞ்சலமும் தேக ஆரோக்கியக் குறைவும் ஆபரேஷன் போன்ற மேஜர் வைத்தியச் செலவுகளும் என எல்லாத் துன்பங்களையும் தொடர் கதையாகச் சந்தித்து சந்தித்து நொந்து போய் விட்டீர்கள். செவ்வாய் மிதுனத்தில் இருக்கும் காலத்திலும் சனி, செவ்வாய் பார்வை சம்பந்தம் கிடைத்த காலத்திலும் உங்களுக்கு துன்பச் சுமை தாங்க முடியாத சுமையாக அமைந்தது. மகர குரு செவ்வாயைப் பார்த்த காலத்திலும் அடுத்த இப்போது கும்ப குருவை செவ்வாய் பார்க்கும் காலத்திலும் உள்ளுக்குள் சந்தோஷம், நிம்மதி, மன நிறைவு இல்லை என்றாலும் வெளி உலகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்கு குறைகள் வராமல் காப்பாற்றப்படுகிறது. இந்த வாரக் கடைசியில் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். அதன் பிறகு பொருளாதார நிலையில் நல்ல திருப்பமும் சேமிப்பும் எதிர்பார்க்கலாம். அதுவரை ஆயிரம் வந்தால் இரண்டாயிரம் செலவு வரும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு சனியின் வீட்டில் கும்பத்தில் மறைகிறார். குருவுக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்ம ராசியில் நிற்பதாலும், குருவுக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 8-ல் மறைந்தாலும் 10-ல் நிற்பதாலும் வாழ்க்கை தொழில் அமைப்பில் செயல் பாதிப்பு, தேக்கம் இல்லை. ஏக்கம் இருக்கலாம்; தேக்கம் இருக்காது. மேலும் இந்த வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவதும் வார மத்தியில் குரு பூரட்டாதியில் சுய சாரம் பெறுவதும் ஒரு நல்ல திருப்பமாகும். அதனால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெறும்; முன்னேற்றகரமான திருப்பங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உதயமாகும். உத்தியோகத்துறையில் முன்னேற்றகரமான மாறுதல்களையும் எதிர்பார்க்கலாம். தொழில் துறையில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தினாலும் 7, 9, 11-ஆம் இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எந்தப் பாதகமும் வராது. கேடு கெடுதியும் அணுகாது. குருவின் அஸ்தமனம் முடிந்த பிறகு குருவின் உதயம் அவர் நிற்கும் இடம், பார்க்கும் இடங்களுக்கு அற்புதப் பலன்களை உண்டாக்கித் தரும்.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி பாக்கிய ஸ்தானத்தில் இருந்தாலும் ஜனவரி- 10 முதல் வக்ரமாக இருப்பதால் சில காரியத் தடைகளும் தாமதங்களும் ஏற்படுகிறது. பொதுவாக சனியின் வக்ரம் உக்ர பலம் என்றாலும் அட்டமாதிபதியான சூரியன் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பதால் தாமதத்தை நினைத்து- தடைகளை நினைத்து மன வெறுப்புக்கும் விரக்திக்கும் ஆளாவீர்கள். என்றாலும் சனி நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெறுவதால் நடப்பதும் நடக்க வேண்டியதும் நல்லபடியாக நடக்கும் என்று மனத்தளவில் ஆறுதல் அடைவீர்கள். 2-ஆம் இடத்து குரு வாரக் கடைசியில் அஸ்தமனம் நீங்கி உதயம் ஆவதால் பணக் கஷ்டமும் நீங்கி தாராளமான வரவு- செலவுகளைச் செயல்படுத்தலாம். 4, 11-க்குடைய செவ்வாய் நீசமடைந்து ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும் 5, 10-க்குடைய சுக்கிரன் உச்சபலமாக இருப்பதால் செயலளவில் அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகர்யங்களில் குறைவிற்கு இடமில்லை. என்றாலும் 3-ல் மறைவு என்பதால் நிறைவிற்கும் இடமில்லை. காலமும் நேரமும் துடுப்பில்லாத படகு போல காற்றடிக்கும் பக்கம் பயணம் போகும்.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிக்காரர்களுக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனி பெயர்ச்சியாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் சனி தற்போது வக்ரம் என்பதால் வக்ரத்தில் உக்ர பலம். மனத்தளவிலே திருப்தியும் முன்னேற்றமும் இல்லாமல் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்றுக் கிடக்கும். ஆற்றில் கிடக்கும் கல் வேகமான வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும். ஆனால் கிணற்றில் கிடக்கும் கல் அசைவற்றுக் கிடக்கும். சிலருக்கு சனியின் வக்ரம் இடப் பெயர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் 10-க்குடைய செவ்வாய் 6-ல் நீசமாக இருப்பதால் நினைப்பது ஒன்று, நிகழ்வது ஒன்றாக முடியும். ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும்; ஒன்றும் நினையாமல் இன்னொன்று நிற்கும்; எனையாளும் ஈசன் செயல் என்று ஒரு பாடல் உண்டு. அது உங்களுக்கே பொருத்தமான பாடலாக அமையும். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் திட்டங்களும் அற்புதமாகத் தெரிந்தாலும் அதற்கான முயற்சிகளும் மிகத் தீவிரமாக அமைந்தாலும் எது வருகிறதோ அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று காயாகத் தெரியும் காரியங்கள் அனைத்தும் நாளை பழுத்துக் கனியாகி இருக்கும்.
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு ராசிக்கு 12-ல் மறைந்திருக்கிறார். வாரத் தொடக்கத்தில் ராகுவின் சாரத்தில் இருக்கும் குரு அடுத்து பூரட்டாதி 1-ல் சுயசாரம் பெறுகிறார். குரு 10-க்குடையவர். அவரை 9-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபங்கம் பெற்றுப் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. செவ்வாய் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். பூசம் சனியின் நட்சத்திரம். சனி செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். அதனால் செவ்வாய்க்கு நீசபங்கம் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தாலும் அவற்றை எல்லாம் சந்தித்து சமாளிக்கும் வல்லமையும் ஏற்படுகிறது. 6-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். சனி சூரியன் நட்சத்திரத்தில் புதன் வீட்டில் நின்று, மீனத்தில் நிற்கும் சூரியன், புதனையும் பார்க்கிறார். எனவே, செலவுகள் படையெடுத்து வந்து வாசல் கதவைத் தட்டினாலும் வரவுகளும் எதிர்பாராமல் வந்து தாக்குப்பிடித்து காத்து நிற்கும். மலை போல வரும் பிரச்சினைகள் எல்லாம் பனி போல விலகிவிடும். புதனும் சுக்கிரனும் ஜென்ம ராசியில் நீசம். உச்சம் என்றாலும் புதனுக்கு நீசபங்கம் என்பதால் கௌரவம் பாதிக்காது. செயல்கள் பாதிக்காது. 4-ல் கேது, 10-ல் ராகு கேதுவுக்கு சனியின் பார்வை பிரச்சினைகளை உருவாக்கினாலும் குருவும் கேதுவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
JPAGE_CURRENT_OF_TOTAL |
|---|
Group Sites: Daily Mirror | Sunday times | Lankadeepa | Financial Times | epaper | HI Mag | Lanka Women | Hit Ad | WNL | Tamil Mirror | Mirror Sports |
Services : Home delivery | Webmaster| Web Ads | Editorial | Help Desk|
Copyright © 2012 Wijeya Newspapers Ltd.
.gif)